மா. செந்தமிழன்
(ஒலி வடிவ உரையின் எழுத்து வடிவ கட்டுரை)
ஒவ்வொரு நாளும் புத்துடல் பெறுவீர்
[பகுதி 1] -
ஆசான் ம.செந்தமிழன்
ஒவ்வொரு நாளும் புத்துடல் பெறுவீர் எனும் தலைப்பில் ஆசான் மா செந்தமிழன் சிதம்பரத்தில் 27 .02.2021 அன்று நடைபெற்ற செம்மை வாழ்வு நிகழ்வில் உடல் நலத்துக்கான வழிகாட்டல்களை வழங்கி ஆற்றிய நல உரை
செம்மை நலம் உரையின் முதல் பகுதி
அனைவருக்கும் வணக்கம்
நம்முடைய செம்மை வாழ்வு என்ற ஒரு கருத்து ஏற்கனவே உங்களில் பலருக்கு அறிமுகமாகி இருக்கும். இந்த வகுப்பில் செம்மை வாழ்வு என்ற கருத்துடைய சில நடைமுறை ஒழுங்குகளை பற்றி உங்களுக்கு கற்றுத் தர விரும்புகிறோம்.
செம்மை வாழ்வு என்பது நோயற்ற வாழ்வு அல்ல. நோயற்ற வாழ்வு என்று எதுவுமேயில்லை.
உடலென்றால் நோய் எனும் ஒரு பகுதி இருக்கும். நலம் என்பது இன்னொரு பகுதி. இந்த இரண்டும் இணைந்திருப்பது தான் உடல்.
இதை வெற்றி பெற முயற்சிப்பதும், நோய்களை எல்லாம் வெற்றி பெற்று விடுவேன் என்று நம்புவதும் தான் சிக்கல்.
நோய் மிகும் போது அதை எப்படி தணிப்பது? என்பது தான் புரிந்து கொள்ளப்பட வேண்டிய பாடம்.
நோய் மிகும். அவ்வாறு மிகுந்தால் உடலில் செயல்பாடுகளில் குறை ஏற்படும். அது வலியாக இருக்கலாம். மயக்கமாக இருக்கலாம். உதிரப் போக்காக இருக்கலாம். பசியின்மையாக இருக்கலாம். மந்தம், சோர்வு ஆகியவையாக இருக்கலாம்.
எதுவாக இருந்தாலும் இந்த சிக்கல்களை எப்படித் தணிப்பது என்பது தான் அடிப்படையில் மருத்துவம்
நோயே இல்லாமல் வாழ வேண்டும் என்று நினைப்பது பேராசை. அப்படி ஒன்று இல்லை. என்றும் இல்லை. இது மனிதர்களுக்கு மட்டுமல்ல. எல்லா உயிரினங்களுக்குமே இது பொருந்தும்
இதை ஏன் தொடக்கத்திலேயே கூறுகிறோம் என்றால் இந்த செம்மை வாழ்வு என்ற கருத்தை நீங்கள் கற்கும் போது உங்களுடைய அறிவு, ஒரு குறிப்பிட்ட நோய்க்கு ஏதேனும் மருந்து இருக்குமா? என்பதைத் தேடிக் கொண்டே இருந்தால் நான் எதிரில்தான் இருப்பேன் உங்களுக்குத்தான் பேசுவேன். ஆனால் என் பேச்சு உங்களுக்குப் புரியப் போவதில்லை.
இது போல எண்ணற்ற வகுப்புகளை நாம் நடத்தி இருக்கிறோம். பல ஆயிரம் பேரிடம் இதுவரை உரையாடி இருக்கிறோம்.
எவ்வளவு தான் உரையாடினாலும், நாம் என்ன கூறினோம்? என்பதிலிருந்து யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் அல்லது பலர் அப்படி கேட்க மாட்டார்கள்
என்ன காரணம் என்றால், ஒருவருடைய உரையைக் கேட்கும்போதே தன் நோக்கத்திலிருந்தே கேட்டுக் கொண்டிருப்பது. அவர்களுக்கு ஏற்கனவே சில கேள்விகள் இருக்கும் . அந்தக் கேள்விகளுக்குச் சில பதில்களும் அவர்களிடம் இருக்கும். அதைப் பற்றிப் பேசுகிறார்களா? இல்லையா? என்ற நோக்கத்திலேயே எதைக் கேட்டாலும், யார் பேசினாலும் அவர் என்ன பேசுகிறார் என்பது புரியாது.
ஆகவே ஒன்றை முதலில் தெளிவாக வைத்துக் கொள்ளுங்கள்.
நோயில்லாத வாழ்வு என்பது ஒரு வாசகம்.அது உண்மையற்ற ஒரு வாசகம்.
நோய் இருக்கத்தான் செய்யும். அது மிகாமல் எப்படித் தணித்துக் கொண்டே இருப்பது என்பதுதான் வாழ்வியல் .
நம்முடைய மரபு வாழ்வியல் என்பது மிகும் நோயை தணிப்பது எவ்வாறு என்பதை ஒரு வடிவமைப்பு ஆக்கிய வாழ்வியல் .
நம்முடைய வாழ்க்கை முறை மரபு வாழ்வியலில் நோய் தணிக்கும் வழி முறைகள் இருக்கின்றன.
அவற்றை இந்த சூழலுக்கேற்ப பொருத்தி முன்னெடுத்துக் கற்றுத் தருகிறோம்.
இதே இந்த மடத்தில் அறுபத்தி மூவர் நாயன்மார் மடத்தில் பல ஆயிரம் பேருக்கு உடல் நல வழி காட்டுதல்களை செய்திருக்கிறோம். பல முறை இங்கு பாடங்கள் நடத்தி இருக்கிறோம்.
அவ்வளவு பேரும் நோயில்லாமல் இருக்கிறார்களா? அல்லது நோயச்சம் இல்லாமல் இருக்கிறார்களா? என்றால் ஏதேனும் ஒரு சிக்கல் வந்தால் அச்சத்திற்கு ஆட்படுபவர்களாகத்தான் இருக்கிறார்கள்.
ஒரு சிக்கல் வந்தால் நாம் அதைஎப்படி புரிந்து கொள்வது ? எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்பது தான் கல்வியே தவிர சிக்கலே வராத வகையில் ஏதாவது ஒரு கல்வியைக் கூறுங்கள் என்று யாரிடமாவது கேட்டால் அது கல்வியே அல்ல.
ஆனால் இவ்வாறான ஆசைகளைத் தூண்டி விட்டு அல்லது இதை எல்லாம் செய்தால் சிக்கலே வராது என்று கூறுவது ஒரு வணிகம். இது மிகவும் எளிது.
மனிதர்களில் பெரும்பகுதியினர் அந்த ஆசைகளுக்கு ஆட்படுகிறார்கள். ஆனால் நாம் எல்லா தளங்களிலும் முன்வைப்பதைப் போல உடல் நலம் அல்லது வாழ்வியல் என்ற தளத்திலும் எது உண்மையோ அதை மட்டுமே உரைக்க வந்திருக்கிறோம்.
அந்த உண்மை நோயில்லாத உடல் என்று எதுவுமில்லை என்பதுதான்.
இப்பொழுது நாம் நோயைத் தணிப்பது எப்படி என்பதைக் கற்றுக் கொண்டாலே போதும் என்பது தான் பாடத்தின் சுருக்கம்
அதற்கான சில ஒழுங்குகளையும், நடைமுறைகளையும் இந்தப் பாடத்தில் நான் உங்களுக்கு முன் வைக்கிறேன்.
இதன் பிறகு இந்த ஒழுங்குகளைப் பற்றிய நடைமுறை விளக்கங்தள், வீட்டு மருந்துகளின் செய்முறைகளை எல்லாம் உங்களுக்கு கற்றுக் தருவோம். இந்த இரண்டு நாட்களிலேயே உங்களுக்கு கற்றுக் தருவோம். வீட்டு மருந்துகளை எல்லாம் செய்து காட்டுவோம்
இந்த இரண்டு நாட்கள் எனப்படும் காலம் இப்பொழுது கற்பிக்கப்படும் பாடத்தின் கருத்துக்கு மிகவும் குறுகிய காலம். அதாவது இந்த இரண்டு நாட்களில் இவ்வளவு கற்பிக்கவே இயலாது. ஆனாலும் இதை நீட்டித்து
பல நாட்கள் வகுப்பாக நடத்துவதற்கான வாய்ப்பில்லை. இரண்டு நாட்களிலேயே கற்றுத் தர வேண்டும் என்று விரும்புகிறோம். ஆகவே நீங்கள் எவ்வளவு ஆழமாக இதை உள்வாங்குகிறீர்கள் என்பதைப் பொறுத்து நீங்கள் கற்றுக் கொள்வீர்கள். குறிப்பாக என்னுடைய பாடத்தை நான் ஒன்றரை மணி நேரம் அல்லது மிக மிக கூடுதலாக இரண்டு மணி நேரம். இது தான் நான் பேசும் நேரம் பொதுவாகவே . அந்த நேரத்தை Pங்கள் எவ்வளவு உள்வாங்குகிறீர்கள் என்பதைப் பொறுத்து உங்களுக்கு நடைமுறைகளின் மீது ஆளுமை இருக்கும்.
வீட்டு மருந்துகளைக் கற்றுக் கொண்ட பிறகு எந்த மருந்தை எந்த சூழலில் பயன்படுத்த வேண்டும் என்று புரிதல் வேண்டும். நீங்கள் பலருமே கேள்விப்பட்ட செய்திகளை நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
சித்த மருந்துகள் அல்லது சித்த மருத்துவ செய்முறைகளை அந்த மருத்துவத்தை முன்னெடுப்பவர்கள், முன்னோடிகள் கமுக்கமாக வைத்திருந்தார்கள், அதை வெளியில் சொல்லவில்லை என்ற செய்தியை கிட்டத்தட்ட எல்லோருமே கேள்விப்பட்டிருப்பீர்கள். நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
தொடக்கத்தில் அவர்கள் ஏன் அப்படி செய்தார்கள், எனக்கும் கோபம் இருந்தது.
எல்லாவற்றையுமே சொல்லிக் கொடுத்திருக்கலாமே என்ற எண்ணம் எனக்கும் இருந்தது
ஆனால் கடந்த ஏழு ஆண்டுகளாக இந்த துறையில் நான் இருப்பவன் என்ற வகையில் பலரை சந்தித்திருப்பவன் என்ற முறையில் எனக்கு இப்பொழுதுதான் புரிகிறது.
இந்த உடல் நலம் குறித்த செய்திகளை உடல் நலத்திற்கான தீர்வு தரும் பொருட்களை அனைவருக்கும் கற்றுத் தருவதற்கு வாய்ப்பேயில்லை என்று நான் இப்பொழுது புரிந்து கொண்டேன்.
இப்பொழுது இந்தப் பாடத்தில் மட்டுமல்ல, நம்முடைய எல்லா வகுப்புக் ளிலும் அனைத்தையும் நாம் கற்றுத் தருவதே இல்லை.. எனன்றால் ஒரு பாடத்தை எந்த ேநாக்கில் புரிந்து கொள்ளத் தொடங்குகிறார்கள் என்பதிலிருக்கிறது அவர்களின் புரிதலின் ஆழம்.
ஒரு சான்றாக இங்கு உங்களுக்கு பூண்டுப்பாகு என்ற ஒரு வீட்டு மருந்தினைக் கற்றுத் தருவோம். இந்தப் பூண்டுப்பாகு என்ற அந்த வீட்டு மருந்து ஒரு அருமருந்தாக செயல்படுகிறது. அதை நாம் ஓரிரு மாதங்களுக்கு முன்புதான் அவ்வாறான ஒரு மருந்தை உணர்ந்தோம்.
இதைத் தேவைப்பதகிறது என்பதை உணர்ந்து அதை நாமே வடிவமைத்த ஓரு மருந்து அது.
இது தீவிரமான உடல் வலி, செரிமானமின்மை, நெஞ்சு வலிப்பது போன்ற நிலை ஆகியவற்றிற்கெல்லாம் உடனடியாக விடுவிப்புக் கொடுக்கிறது. . உடனடியாக சிக்கலைத் தீர்க்கிறது. ஆனால் மிகவும் எளிமையான மருந்து. யார் வேண்டுமானாலும் செய்யலாம் .மிக எளிதாக கற்றுக் கொடுத்து விடலாம்.
இந்தப் பூண்டும் பாகை பற்றி. இன்னும் ஒரு சில மாதங்களில் சமூகத்தில் என்ன செய்திகள் புழங்கும் என்று ஓரளவிற்கு எனக்கும் புரிகிறது.
10.00 :
நீங்கள் இன்னும் ஒரு சில மாதங்கள் கழிந்து நீங்களே பார்ப்பீர்கள். உங்களுக்கே யாராவது வந்து நீங்கள் இங்கு நேரடியாக வந்து நம்மிடம் வந்து அதைத் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கே வந்து பூண்டுப் பாரு மாரடைப்புக்கு மருந்து என்று சொல்வார்கள். இது ஏன் நிகழ்கிறது என்றால் உடலைப் பற்றியும், உடல் நோய் தணிக்கும் முறைகள் பற்றியும் ஆழமான புரிதல் எனக்கு வேண்டாம் என்ற மனிதர்களுடைய பிடிவாதம்.
ஒரு வகையில் அது ஒரு பேராசை. நான் எதையும் ஆழமாக கற்றுக் கொள்ள மாட்டேன். ஆனால் எனக்குத் தீர்வு வேண்டும் என்ற ஒரு பேராசை.
ஏற்கனவே நிலவேம்பு இப்படித்தான் எந்தக் காய்ச்சல் இருந்தாலும் நிலவேம்புக் கசாயம் குடிப்பது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது.
பல உரைகளில் குறிப்பிட்டது போல இஞ்சி, சுக்கு ஆகியவை எல்லாம் உடல் நலனைக் கெடுக்கும் அளவுக்கு பயன்படுத்தப்படுகின்றன.
மிளகு பற்றிய புரிதல்கள் அவ்வாறே இருக்கின்றன. சீரக நீர் என்று ஒன்றை நாம் அறிமுகப்படுத்தியிருந்தோம். அந்த சீரக நீர் இப்பொழுது படாத பாடு படுகிறது. எதற்கு சீரக நீர் குடிக்க வேண்டும்? எப்போது குடிக்க வேண்டும்? என்ற புரிதல் இல்லை.
நாம் ஒரு சிலருக்குத் தானே கற்றுக் கொடுக்கிறோம். ஆனால் அந்த ஒரு சிலரிடமிருந்து இந்த தகவல் எப்பர பரவுகிறது? கல்வியால் பரவுகிறதா? என்றால் இல்லை. அது ஒரு தகவலாகப் பரவிக் கொண்டே இருக்கிறது
ஒரு பாடம் தகவலாகி விட்டால் என்ன செய்வது? பாடம் என்றால் அது பல பரிமாணங்களைக் கொண்டது. அதனுடைய ஆழம் என்ன? எந்தச் சூழலில் எதைச் செய்ய வேண்டும் என்பதெல்லாம் பாடம். ஆனால் தகவலுக்கு இதெல்லாம் தேவையில்லை.
தகவலென்றால் ஒரு செவி வழியாக பரவிக் கொண்டே இருக்கலாம். இதைச் செய்தால் அதற்கு நல்லது. அதைச் செய்தால் இதற்கு நல்லது என்று.
ஒரு வயதான பெண், ஒரு 65 வயது பெண், எனக்கு நெருங்கிய தோழியினுடைய தாய். அவர் வாழ்வில் நடந்ததைப் பார்த்ததும் இவ்வாறான என்னுடைய எச்சரிக்கை உணர்ச்சிக்கு ஒரு காரணம். அவருக்கு மூச்சுத் திணறல் அவ்வப்போது ஏற்பட்டது. அவ்வளவுதான். அவருக்கு வந்த சிக்கல் அவ்வளவுதான். மூச்சு விடுவதில் அவ்வப்போது திணறல் ஏற்பட்டது. இதற்காக அவர்கள் மருத்துவத் துறையை நாடுகிறார்கள். நாடும் பொழுது அவர்கள் வசச் சொல்லி ஆய்வு செய்து ஒரு கட்டி இருக்கிறது. அது ஒரு புற்று நோய் கட்டி என்று சொல்லி விட்டார்கள்.
அவருக்கு கட்டி இருப்பது வயிற்றில், அதாவது கருப்பைக்கு அருகே வயிற்றில் அந்த கட்டி இருக்கிறது. இவருக்கு எழும் சிக்கல் மூச்சுத் திணறல்.
இந்த இண்டுக்கும் ஒரு தொடர்பு இருப்பதாகக் கூறி அல்லது தொடர்பு இருக்கலாம் என்று கூறி புற்று நோய் சிகிச்சைக்கு அவரை அழைத்துச் செல்கிறார்கள்.
இந்த நிலையில் நாம் மூச்சுத் திணறல்தான் இருக்கிறது என்றால் மூச்சுத் திணறலுக்கு என்ன உண்டோ அதைச் செய்யுங்கள் என்று சில வழி காட்டுதல்களை வழங்கினோம். ஒரு சில நாட்கள் அவற்றை அவர் கடை பிடித்து ஓரளவிற்கு விடுபட்டார். மூச்சுத் திணறல் ஏறத்தாழ இல்லை அல்லது வந்தாலும் குறைந்த நேரம் இருக்கிறது என்று சொன்னார்கள். அதாவது ஏழு அல்லது எட்டு நாட்களிலேயே அவர் நிம்மதியாக உட்கார்ந்திருக்கும் அளவிற்கு வந்து விட்டார், மிக எளிமையான வழிகாட்டல்களின்படி.
காம் அங்கு செல்லும் போதே அந்தப் பெண்ணை சந்திக்க செல்லும் போதே அதன் பிறகுதான் சந்திக்கச் செல்கிறோம். தொலைவில் இருந்தே வழிகாட்டல்களை எல்லாம் சொல்லி விட்டோம். முன்னேற்றம் டைந்து கொண்டிருக்கிறார். நலமடையவில்லை. நேரில் சந்திக்கலாம் என்று செல்லும்போதே அவர் புற்று நோய்க்கான இயற்கை மருத்துவம், நாட்டு மருத்துவம் இப்படி எந்த சொல் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். இந்தத் தீர்வுகளைப் பற்றி அவர் படித்து கொண்டிருக்கிறார். அவருக்கு வந்த தகவல்களைப் படித்துக் கொண்டு அவற்றில் ஒரு சிலவற்றை செய்து கொண்டிருக்கிறார். அதைப் பார்த்து நாம் அப்போதே கூறினோம்.
இவற்றில் கூறப்பட்டுள்ளவைகள் எல்லாமே தவறான தகவல்கள். இயற்கை மருத்துவம் என்றால் என்ன? சித்த மருத்துவம் என்றால் என்ன? இந்த தகவல்களை எல்லாம் நீங்கள் பின்பற்றக் கூடாது என்று நாம் கூறினோம். ஆனால் அவர்கள் கேட்கவில்லை.
ஒரு சில மாதங்களுக்குப் பிறகு எல்லா மருத்துவ முறைகளுக்கும் சென்று அவர் மரணமடைந்தார். அது ஒரு பெரிய இழப்பு, அந்தக் குடும்பத்தினருக்கு. தனிப்பட்ட முறையில் எனக்கும் அது மிகுந்த வருத்தத்தைக் கொடுத்த மரணம். இது போல பல சான்றுகளை நான் பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.
எல்லோருடைய கைகளிலும் தகவல்கள் இருக்கின்றன.
எலுமிச்சம் vழத்தில் என்னவெல்லாம் செய்யலாம்? தேன் எவற்றுக்கெல்லாம் மருந்து என்று ஏராளமான தகவல்கள் இருக்கின்றன.
15.00
நம்முடைய குடும்பத்தில் ஒருவருக்கு உடல் நலம் குன்றியது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு பக்கம் வலது கை வலது கால் திடீரென செயல்படவில்லை சில நிமிடங்கள். அதன் பிறகு செயல்பட்டு நலமுடன் இருக்கிறார்.
நம்முடைய கொள்கையை பின்பற்றுபவர்களல்ல. ஆனாலும் இந்த முறை நான் சொன்ன ஒழுங்கு முறைகளை எல்லாம் கடைபிடித்தார்கள். நலமுடன் வீடு திரும்பி விட்டார்கள்.
இந்த சிக்கல் ஒரு பக்கம் ஒரு கை ஒரு கால் சரியாக செயல்படவில்லை. இதைக் கேள்விப்பட்டு வந்து செல்பவர்கள் சொல்லும் மருத்துவர் குறிப்புக்கள் என்னை வியப்படைய வைக்கின்றன.
3வ்வொருவரும் ஒரு ஐந்து மருத்துவக் குறிப்புக்களை சொல்கிறார்கள். இங்கு எல்லோருமே மருத்துவர்கள் என்பதைத் தான் புரிந்து கொண்டேன். மருத்துவம் தெரியாத யாருமே இல்லை. இதற்கு தேர்வெல்லாம் தேவையேயில்லை. தேர்வு தேவையில்லை, கல்லூரி தேவையில்லை, நூல்கள் எதுவுமே தேவையில்லை. இங்கு எல்லோருமே மருத்துவர்கள் என்பதைத் தான் புரிந்து கொண்டேன்.
இந்தச் சூழலில் இருந்துதான் சித்தத்தை உணர்ந்தவர்கள் ஏன் எல்லாவற்றையும் கற்றுக் கொடுக்கவில்லை என்பது புரிந்தது.
எல்லாவற்றையும் வெளியே கற்றுக் கொடுக்கத் தொடங்கி விட்டால் என்ன ஆகும் என்றால் இதுதான்.
மனிதர்கள் தன்னுடைய தேவைக்காக ஒரு அறிதலை கற்றுக் கொள்கிறவர்கள் ஒரு நிலையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு அதற்கு மேல் எதுவும் தேவையில்லை.
எனக்கு இது தேவை என்ன செய்ய வேண்டும் என்று சொல்வது ஒரு நிலை .இவர்கள் தான் பெரும்பான்மையினர்.
அடுத்த நிலையில் இருப்பவர்கள் அதன் ஆழத்தை கற்க விரும்புகிறேன். எனக்கு நோயில்லை. ஆனால் இந்த துறை மீது எனக்கு விருப்பம் இருக்கிறது என்பார்கள் இரண்டாவது பிரிவினர். இவர்கள் மிகச் சிலர் இவர்கள் கற்றுக் கொள்வதற்காகவே காத்திருப்பவர்கள். விருப்பத்தில் இருப்பவர்கள்
இந்த இரண்டாவது பிரிவினரில் ஒரு சிலருக்கு பாடத்தைக் கற்றுக் கொடுத்து அவர்களை தேர்ச்சியடையச் செய்வதே ஒரு ஆசானுக்கு வாழ்நாள் பணி.
நாம் அறிந்தவரை ஆசான் திருமூலருக்கு 12 சீடர்கள் தான். ஆனால் இன்றைக்கு தமிழ்நாட்டில் உள்ள 7 கோடி பேருமே சித்தர்களுடைய சீடர்கள்தான். 7 கோடி சித்தர்கள் இருக்கிறார்கள் என்று கூடச் சொல்லலாம். எல்லோருமே சித்தர்களின் சீடர்கள் அல்லது அவர்களில் பலர் சித்தர்கள் .இங்கு அறியாமையில் இருப்பவர் யாருமே இல்லை. எல்லோருக்குமே அறிவு உண்டு. அவருடைய அறிவு எது? பரப்பப்படும் சில தகவல்கள் அவ்வளவுதான். சில தகவல்களை அவர்கள் கேள்விப்படுகிறார்கள், படிக்கிறார்கள். அதைத் தெரிந்து கொண்டால் அவர்களுக்கு முடக்குவாதம் என்றால் என்ன என்று தெரியும். மூளை நரம்பு சிக்கலைத் தீர்ப்பது எப்படி என்று தெரியும். அவ்வளவுதான்.
ஆக ஒரு கல்வியைக் கற்பதற்கு என்ன பக்குவம் வேண்டும் என்பதற்கும், தேவைக்கு ஒன்றைப் பயன்படுத்திக் கொள்வதற்கும் உள்ள வேறுபாடு இங்கே இல்லை. இதனால் உன்னதமான பல உடல் நல கருத்துக்கள் சிதைந்து போகின்றன.
உங்களில் எத்தனை பேர் ஆழமாகப் புரிந்து கொள்வீர்கள் என்று எனக்குத் தெரியாது. இதை புரிந்து கொள்ள வேண்டும் என்ற வேண்டுதல் இருக்கிறது.
ஏனென்றால் இந்த மரபு வழிப்பட்ட உடல் நல அறிவியல் இருக்கிறதே அதுதான் மனித குலம் வாழும் வரை மனிதர்களை காக்கும் அறிவியல்.
எவரையும் சார்ந்திராமல் வீட்டில் உள்ள பொருட்கள் வழிகளால் மட்டுமே உடலின் எல்லா சிக்கல்களையுமே தணித்துக் கொள்ளும் அறிவியல் நம்முடைய மரபு வழியில் இருக்கிறது.
இது எவ்வளவு பெரிய வரம்
இந்த வரத்தை தன்னலத்திற்காகவோ, பேராசைக்காகவோ தொடர்ந்து சுரண்டிக் கொண்டே இருந்தால் ஒரு நிலையில் இது சிதைந்து போகும். அப்படித்தான் இன்று சிதைந்து கிடக்கிறது.
இதை பீட்டெடுத்து ஒரு சிலருக்கு இதை விளங்கச் செய்வது ஒரு பெரும்பணியாக இருக்கிறது.
ஆகவே நீங்கள் நேரில் வந்திருக்கிநீர்கள் இதைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தோடு வந்திருக்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன்.
இவ்வாறான உரைகளை எல்லாம் இணையத்தில் ஏத்தி விட்டாலே போதும். நேரில் யாரையும் வரச் சொல்ல வேண்டிய தேவையில்லை. ஆனால் ஏன் நேரில் சந்தித்து இவற்றைக் கற்றுக் கொடுக்கிறோம் என்றால் முறையாகக் கற்றுக் கொள்வதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் , முறையாக நாமும் பாடம் நடத்த வேண்டும். வருவோரும் முறையாகக் கற்றுக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு ஏதேனும் ஐயம் இருந்தால் கேட்டுத் தெளிவுற வேண்டும் என்பதற்காகத்தான்.
இவற்றை எல்லாம் கற்றுக் கொள்வதுதான் ஒழுங்கு.
உடல், வாழ்க்கை முறை ஆகிய .இரண்டிற்கும் இடையில் உள்ள உறவு எது என்று புரிந்து கொள்வதுதான் ஒழுங்கு.
உடலுக்கும், வாழ்க்கை முறைக்கும் உள்ள உறவு தான் நோய் அல்லது நலம் ஆகிய .இsண்டு கூறுகளையும் ஆக்கி வைத்திருக்கின்றது.
மருந்துகள் எனப்படுபவை உடல் நலத்திற்கு துணை செய்பவை .
அதாவது நோய் மிகுந்து எழுந்து துன்புறுத்தும்போது அந்த துன்பங்களை தணிப்பதற்கு மருந்துகள் இருக்கின்றன.
துன்பங்களை தீர்ப்பதெற்கென்று எந்த மருந்துகளும் எந்த முறைகளிலும் இல்லை. தீர்த்தலென்பது என்ன? அது இல்லாமல் செய்வதுதானே.
ஒன்று இருக்கிறது அதை இல்லாமல் செய்து விட்டால் அது தீர்ந்து விடுதல்.
அவ்வாறு நோயை தீர்ப்பதற்கு மருந்து இல்லை. ஆனால் நோயைத் தணிப்பதற்கு மருந்து உண்டு.
நோயை எது தீர்க்கும் என்றால் உங்களுடைய ஒழுங்கு, உங்களுடைய வாழ்க்கை முறை, உங்களுடைய மனநிலை ஆகியவை எல்லாம் நோயைத் தீர்க்கும்.
மீண்டும் சொல்கிறேன். மருந்து நோயைத் தணிக்கும், உங்களுடைய ஒழுங்கு அல்லது மனநிலையும் வாழ்க்கை முறையும் நோயை தீர்க்கும்.
மருந்துகளை முதன்மையாகக் கருதிக் கொண்டு அவற்றைப் பற்றிய தகவல்களை சேகரித்துக் கொண்டே இருந்தால் உங்களால் ஒரு போகம் நோயைத் தீர்க்க இயலாது.
அது இருந்து கொண்டே இருக்கும் அல்லது அது எந்த நிலையிலும் எழுந்து விடும், மிகுந்து விடும் என்ற நிலையிலேயே இருக்கும், அச்சுறுத்தலாகவே இருக்கும்.
நோய் என்றால் அது தணிந்த நிலையில் அடங்கி இருக்க வேண்டும்.
உடலில் இருக்கும் ஏதாவது ஒரு உறுப்பில் ஏதாவது ஒரு சிக்கல் இருந்து கொண்டேதான் இருக்கும்.
மருந்துகளை தொடர்ந்து நாடினால், உடல் தன்னுடைய ஒழுங்கமைவைக் குறைத்துக் கொள்ளும். சிதைத்துக் கொள்ளும்.
ஒரு சிக்கல் எழும் பொழுது உடனடியாக அதற்கென்று ஒரு மருந்தை நீங்கள் பயன்படுத்தத் தொடங்கினால் உடலுடைய எதிர்ப்பாற்றல் தன்னுடைய திறனைக் குறைத்துக் கொள்ளும்.
நான் கூறுவது நவீன மருந்துகளைப் பற்றியல்ல. நான் கூறுவது மரபு மருந்துகளைப் பற்றித்தான்.
நீங்கள் என்ன புரிதலில் இருக்கிறீர்கள் என்றால் நம்முடைய மரபு மருந்துகள் பக்க விளைவுகள் அற்றவை என்ற புரிதலில் இருக்கிறீர்கள். இதெல்லாம் ஒரு வேடிக்கையான கருத்து இது ஒரு ......... கருத்து .
மருந்து என்றால் என்ன? உணவு என்றால் என்ன? என்று நாம் ஏற்கனவே ஒரு உரையில் குறிப்பிட்டுள்ளோம்
23.00
பலர் புதியவர்களாக இருப்பதால் அதை நாம் சுருக்கமாக அதன் இலக்கணமாக கூறுகிறோம்
விரிவின் செறிவு உணவு, செறிவின் விரிவு மருந்து.
அதாவது விரிவாக இருக்கும் பல பொருட்கள் செறிவாக மிகச் சிறு துளிகளாக உடலுக்குள் அமைந்தால் அது உணவு. நிறையப் பொருட்கள் இருக்கின்றன வெளியே. அந்த எல்லாப் பொருட்களையும் விரிவு என்று கொள்ளுங்கள். விரிவுதானே, விரிந்து கிடக்கின்றன.
எங்கோ ஒரு தோட்டம் இருக்கிறது. அந்தத் தோட்டத்தில் எவ்வளவோ காய்கறிகள் இருக்கின்றன. பருப்பு, புளி ஆகியவை எல்லாம் விரிவு பொது கிடக்கின்றன.
அவை எல்லாம் ஓரளவிற்கு சுருங்கி உங்களுடைய தட்டில் இருக்கின்றன. இவற்றை நீங்கள் வாய் வழியாக 2ண வாக்குகிறீர்கள். மேலும் அது சுருக்கமடைகிறது. செரிமாணத்தின் போது இவ்வளவு விரிவும் சில துளிகளாகி விடுகின்றன. அதாவது விரிவாக உள்ள பல பொருட்கள் உடலுக்குள் சென்று சில துளிகளாகி விட்டால் அது செறிவு. இது தான் உணவு.
அப்வளவு விரிவில் இருந்த திறன் எல்லாப் பொருட்களுக்குமே திறனுண்டு புளிக்கு திறனுண்டு. காய்களுக்கு திறனுண்டு. புலால் உணவு பொருட்களுக்கு திறனுண்டு. அரிசிக்கு திறனுண்டு அல்லவா? இந்த திறன் யாவும் உங்களுடைய உடலுக்குள் சில துளிகளாக மாற்றமடைகின்றன. அந்தத் துளிகளுக்குள் இந்த எல்லா திறன்களுமே இருக்கின்றன. அதுதான் சத்து . உணவு சத்தாகின்றது என்றால் விரிவு செறிவாகி விட்டது என்று பொருள்.
இதற்கு நேர் எதிராக செறிவின் விரிவு மருந்து. மருந்து எனப்படுவது சில துளிகள் எந்த மருந்தாக இருந்தாலும் சில துளிகள், அந்த சில துளிகள் உடலுக்குள் சென்று உடல் முழுவதும் விரிவடைகின்றன.
உடல் முழுவதும் எந்த மருந்தாக இருந்தாலும் உடல் முழுவதும் அது பரவும், கலக்கும். அவ்வாறு செறிவான பொருட்கள் உடலில் விரிவடைந்தால் அது மருந்து. இதுதான் வேறுபாடு
இந்த உடலுக்கு உணவுதான் அடிப்படை. மருந்தல்ல. சில துளிகளை மட்டுமே வாய் வழியாக உள்ளே அனுப்பி அது விரிவடைந்துதான் உடல் இயங்குகிறது என்பது ஒரு கற்பனையல்லவா?
ஏராளமான பொருட்கள் சில துளிகளாக உடலில் இருந்தால் அது சத்து . அந்த சத்துதான் உடலை செயல்படுத்துகிறது. ஆனால் செறிவான ஒரு சில பொருட்கள் உடலுக்குள் எப்பொழுது செல்கின்றன? இந்த உடலால் செயல்பட முடியாத நிலையில் இந்த செயல்பாட்டைத் தூண்ட வேண்டும் என்பதற்காக சில துளிகள் அதாவது வெளியில் ஏற்கனவே................................
...............செறிவாக உள்ள சில துளிகளை உள்ளே அனுப்பி உடலைத் தூண்டுகிறோம். அதுதான் மருந்து.
இவ்வாறு தூண்டும் நிலை ஏன் ஏற்பட்டது? ஏற்கனவே இந்த உடலில் சத்து குறைபாடு இருக்கிறது. அது எந்த நோயாக இருந்தாலும் இதுதான் அடிப்படை .
ஏதோ ஒரு குறிப்பிட்ட சத்து இந்த உடலில் குறைவாக இருக்கிறது. நம்மைப் பொறுத்தவரை வாதம், பித்தம், கபம் இந்த மூன்றில் ஏதோ ஒன்று குறைவாக இருக்கிறது. மிகக் குறைவாக இருக்கிறது. இந்த மிகக் குறைவாக இருக்கும் ஒன்றை தூண்டுவதற்கான ஒன்று வெளியே இருக்கிறது .
இவ்வாறு உடலில் சத்து மிகக் குறைவாக இருக்கும் போது அதைத் தூண்டும் சத்து வெளியிலிருந்து அனுப்பப்படுகிறதே அதற்கு பெயர்தான் மருந்து.
இது வாழ்க்கையில் மிகக் குறைவாக நிகழ வேண்டும். மிகக் குறைவாக, அரிதாக இதைக் கொடுத்தால்தான் எழுப்ப முடியும் என்ற நிலை. மிகக் குறைவாக நிகழ வேண்டும். இது ஒரு அன்றாடப் பழக்கமாய் ஆகி விடக் கூடாது.
இன்றைய நிலை எப்படி இருக்கிறதென்றால் காலை எழுந்தது முதல் அடங்குவது வரை என்ன மருந்து? என்ன சத்து 7 எந்தப் பொருளில் எது இருக்கிறது? என்ற அறிதல்கள் மிகுந்து விட்டன. இது உங்கள் உடலின் இயல்பான எதிர்ப்பாற்றலை சிதைத்து விடும். சிதைத்துக் கொண்டிருக்கிறது. அது எந்த மருந்தாக இருந்தாலும் சரி
நவீன மருந்துகளில் தீமைகள் மிகுதி. நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். அவற்றை எல்லாம் பக்க விளைவுகள் என்று சொல்லக் கூடாது. எதிர் விளைவு என்று சொல்ல வேண்டும். பக்க விளைவு என்றால் ஒரு நன்மை நடக்கிறது. அதோடு சேர்த்து சில தீமைகள் நடக்கின்றன என்றால் அது பக்க விளைவு.
ஒரு நன்மையும் நடக்கவில்லை. நன்மை போன்ற ஒரு தோற்றம்தான் இருக்கிறது. ஆனால் நேர் எதிரான விளைவுகள் செரிமானச் சிக்கலுக்காக ஒரு மருந்தை உட்கொண்டால் சிறுநீரகம் பாதிக்கப்படும் என்றால் அது பக்க விளைவா? அது எதிர் விளைவு. நேர் எதிரான விளைவு. இது நவீன மருத்துவத்துடைய சிக்கல். அதே வேளை மரபு மருந்துகளில் எந்த பக்க விளைவுகளும் இல்லை என்று கருதுவது ஒரு கற்பனை. ஏன் நம்முடைய இலக்கணம் என்ன?
ஏற்கனவே செறிவாக உள்ள ஒரு பொருள் உடலில் விரிவடைந்தால் அது மருந்து. ஏற்கனவே செறிவாக உள்ள ஒரு பொருளை உடல் எப்படி தொடர்ந்து ஏற்கும்? உடலுடைய அடிப்படை வேலை என்ன?
விரிவை செறிவாக்குவது தான் உடலின் ஒழுங்கு, நீ ஏற்கனவே ஒரு செறிவை உடலுக்குள் அனுப்பிகிறாய். அதைத் தொடர்ந்து அனுப்புவாயென்றால் உடல் தன்னுடைய இயல்பிலிருந்து விலகத்தானே செய்யும்.
நீங்கள் எதை சத்து என்று கருதுகிறீர்களோ அதனை உடல் செரிக்கவில்லை என்றால் அதுதான் நஞ்சு.
நஞ்சும் சத்தும் வேறு வேறு அல்ல. ஒரு நிலையில் அது நஞ்சு.
அடுத்த நிலையில் அது சத்து.
தேள், பாம்பு போன்ற உயிரினங்களில் இருப்பது நஞ்சா ? சத்தா? என்று கேட்டால் அந்தப் பொருளை உள்வாங்கும் மனிதருடைய உடலின் திறனைப் பொறுத்தது.
தேள் கடித்தும் ஏதும் ஆகாதவர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். நாங்கள் எல்லாம் இருக்கிறோம். செம்மை வனத்தில் தேள் கடி வாங்காதவர்ள் இல்லை. செம்மை வனத்தில் குடியுரிமை பெறுபவர்கள் என்று கூட அவர்களைக் குறிப்பிடலாம். வந்து தங்குவார்கள். ஒரு சில நாட்களில் தேள் கடிக்கும். அவர் இங்கு சேர்ந்து விட்டார் நம்முடைய சங்கத்தில் சேர்ந்து விட்டார் என்று பொருள்.
அதற்கு என்ன செய்வோம் என்றால் எதுவுமே செய்ய மாட்டோம். புதிதாக வந்திருப்பவர்களுக்கு தேள் கடித்தால் சில இலைகளை பறித்து மெல்லச் சொல்வோம். எதிர்ப்பாற்றலைத் தூண்டும், அவ்வளவுதான். அதன் பிறகு அவரவர் வேலையைப் பார்க்க கிளம்பி விடுவார்கள். முதலில் இருந்த அச்சம் அதன் பிறகு அவர்களுக்கு இருக்காது.
ஆனால் தேள் கடித்து மயக்கமடைந்தோர், வலிப்பு வந்தோர் எத்தனை பேர்? வாயில் நுரை தள்ளியவர் ஏன் இறந்து போகின்றவர்கள், போனார்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்?
இதிலிந்து என்ன புரிகிறது என்றால், தேளிலிருப்பது நஞ்சா ? அல்லது சத்தா? என்று கேட்டால் அதில் ஒரு பொருள் இருக்கிறது அது உனக்கு நஞ்சா ? அல்லது உனக்கு சத்தா? என்பது உன் உடல் மற்றும் உன் மனநிலையைப் பொறுத்தது.
சில பாம்புகளில் உள்ள நஞ்சு உடனடியாக மரணத்தை விளைவிக்கிறது. அது யாருக்கு அந்த கடி ஏற்பட்டாலும் உடனடி மரணம்தான். அதற்கு என்ன பொருள்? பாம்பில் நஞ்சு இருக்கிறது என்பது மட்டுமா இல்லை. அந்த பாம்பில் ஒரு பொருள் இருக்கிறது. அதை செரிக்கும் அளவிற்கு மனித உடலில் திறன் இல்லை.
ஒரு வேளை யாராவது ஒருவருக்கோ அல்லது ஒரு சிலருக்கே அதை செகரிக்கும் திறன் இருந்தால் அவர் கறக்கு அது மருந்து. அவ்வாறானோரும் இருக்கிறார்கள் ஒரு சிலர். அவர்களை நான் முன் மாதிரியாக காட்ட மாட்டேன். அது உங்களுக்கு ஒரு மூட நம்பிக்கை வளர்த்திடும். அதாவது பாம்புகள் கடித்தாலும் ஒன்றுமில்லை என்ற நம்பிக்கையாக அது மாறக் கூடாது.
மனித உடலுடைய ஒழுங்கு சில பூச்சிகளுடைய பொருட்களை செரிக்க இயலாத அளவிற்கு உள்ளது என்பது ஒழுங்கு.
சில மருந்துகள் இருக்கின்றன. நம்முடைய மருத்துவத்திலேயே சில மருந்துகள் இருக்கின்றன. அந்த மருந்துகளை நீங்களே அந்த மருந்துகளை நீங்களே காய்ச்சி நீங்களே அதைப் பருகினாலும் உடல் நலிவுற்றுப் போகும் அல்லது முடங்கிக் கூடப் போகும். அவ்வாறான சில இவைகள் உங்களைச் சுற்றியே இருக்கின்றன. உங்களுடைய வீடுகளில் அல்லது உங்களுடைய தெருக்களில் அவ்வாறான பல தாவரங்கள் இருக்கின்றன. அதே தாவர இலைகளை அல்லது வேரை எடுத்து முறை அறிந்து ஒரு சில துளிகளாக உட்கொண்டால் நீண்ட காலமாக இருக்கும் பல நோய்கள் உடனடியாக விலகி விடும். இதே தாவரம் மனிதரை முடக்கவும் செய்யும். முறையறிந்து பயன்படுத்தினால் எழுந்து நடமாடவும் செய்யும். இந்த இரண்டும் உள்ளது.
இதிலிருந்து என்ன புரிந்து கொள்ள வேண்டும் என்றால் இவை எல்லாம் மூலிகைகள். இவை எல்லாம் நஞ்சுகள் என்ற பிரிவினை படைப்பில் இல்லை. எது நஞ்சோ அதுதான் மருந்து. எது மருந்தோ அதுவே நஞ்சு.
எருக்கம் இலைகளை நஞ் சென்று கூறுவதா ? அல்லது மருந்தென்று கூறுவதா? .
எருக்கம் பால் நல்லதா? கெட்டதா?
எருக்கம் பால் அற்புதமான மருந்து. அதை எப்படி பயன்படுத்த வேண்டும்? அதன் திறனை எப்படி தணிக்க வேண்டும்? யாருக்கு எந்த ......... எந்த நேரத்தில் கொடுக்க வேண்டும் என்று தெரிந்தால் அது மருந்து.
சில சிக்கல்களுக்கு எருக்கம்பால் மருந்து என்று போகிற போக்கில் நான் சொல்லி விடுகிறேன், நான் சொல்ல மாட்டேன். அப்படி சொல்லி விடுகிறேன் என்று வைத்துக் . கொள்ளுங்கள் என்ன ஆகும்?
எருக்கம்பாலை உட்கொண்டு தீவிரமான நோயாளிகளாக மாறி விடுவார்கள். சிலர் இறர் து கூடப் போகலாம். கடைசியில் பழியும் பாவமும் யாருக்கு போய் சேரும் ? எருக்கம் பாலுக்குப் போய் சேரும். அது பல கோடி ஆண்டுகளாக இருந்து பல விலங்கினங்களுக்கும், பல உயிரினங்களுக்கும், மனிதர்களுக்கும் மருந்தாகவும், உணவாகவும் இருக்கிறது.
33.33
ஒவ்வொரு பொருளிலும் நஞ்சும் உண்டு, அமுதமும் உண்டு. முறையறிந்து கற்றுக் கொண்டு முறையறிந்து பயன்படுத்தும்போது அது மருந்தாகவோ அல்லது சத்தாகவோ மாற்றமடைகிறது. ஆகவே நீங்கள் ஒரு பக்குவப்பட்ட நிலைக்கு வர வேண்டும். நாம் நம்முடைய உடல் ஒழுங்குகளைப் பேணுவோம். உடலில் சக்கல் ஏற்படும் போது அழைத் தணிப்பதற்காக அடிப்படை வீட்டு மருந்துகளை முறையாக கற்றுக் கொள்வோம். அவ்வளவுதான்.
எனக்கு இதற்கு மேல் ஆசையில்லை என்ற இடத்திற்கு நீங்கள் வர வேண்டும்.
நீங்கள் தயவு செய்து அப்படி ஒரு இடத்துக்கு வந்து விட்டு பாடத்தைக் கவனியுங்கள்.
இந்த ஒழுங்கு உங்களிடம் இருந்தால் வீட்டு மருந்துகளை நன்கு புரிந்து கொண்டு, உங்களுடைய குடும்பத்தினர், உங்களுடைய உற்றார், உறவினர், நண்பர்கள் ஆகியோருக்கெல்லாம் நீங்களே வழிகாட்டல்களை செய்து விடலாம். ஒவ்வொன்றிற்கும் என்னையோ, என் போன்றோரையோ எதிர்பார்க்க தேவையில்லை.
இந்த இரண்டு நாள் வகுப்பில் நாம் கற்றுத் தரப் போகும் வீட்டு மருந்து செய்முறைகளை பொறுத்தவரை ஏறத்தாழ உங்களுடைய மிகப் பெரும்பான்மையான உடல் சிக்கல்களுக்கான தீர்வுகளை எல்லாம் கற்றுக் தருகிறோம்.
ஏதேனும் விதிவிலக்காக அரிதாக நிகழும் சில உடல் சிக்கல்கள் இருக்கலாம். ஆனால் மிகப் பெரும்பான்மையாக என்ன சிக்கல்கள் இருக்கின்றனவோ அவற்றை எல்லாம் தீர்ப்பதற்கான வழிமுறைகளை நாம் இங்கு கற்றுத் தருகிறோம்.
ஆகவே நீங்கள் பொறுமையாக, பொறுப்புடன் பாடங்களை புரிந்து கொள்ளுங்கள்.
உடலைப் புரிந்து கொள்வதற்கான எளிமையான வழிதான் முப்பொருள் கொள்கை. அதாவது வாதம், பித்தம், கபம் என்ற கொள்கை. இந்த முப்பொருள் கொள்கையில் எது தலைமையானது என்றால் வாதம், காற்று.
இன்றைக்கு உள்ள எண்ணற்ற உடல் சிக்கல்களுக்கு நேரடி காரணியாக இருப்பது கபம். கபம் என்றால் என்ன? உடலில் நீர் திரிந்த நிலை. நீர் இருக்கிறது. நீர் என்றால் நீரல்ல. நீர்மம். அதாவது குருதி, சளி, கோழை பிற சுரப்புக்கள். ஏராளமான சுரப்புக்கள் இருக்கின்றன அல்லவா? அமிலம் என்பது உங்களுக்குத் தெரியும். வயிற்றில் அமிலம் இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள்
36.20
வாயில் உள்ள எச்சில். அந்த எச்சிலும் ஒரு நீர்மம்தான். நீர்மம் எது நீர்த்திருக்கிறதோ அது நீர்மம். இந்த நீர்மம் திரிந்து போயிருந்தால் அது கபம்.
திரிதல் என்றால் என்ன? அந்த இயல்பில் அது இல்லை. இயல்பிலிருந்து சற்று விலகினாலே அது திரிதல் தான். பால் திரிந்து விட்டது என்று கூறுவீர்கள். பால் திரிந்து விட்டது என்றால் என்ன பொருள்? அது அதனுடைய இயல்பில் இல்லை. அவ்வளவுதான். அடுத்த இயல்புக்கு சென்று விட்டது. அது எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இல்லை. அதுதான் திரிதல்.
உடலில் உள்ள நீர்மம் திரிந்து போனால் அது கபம். வாதம், பித்தம், கபம் என்ற மூன்றுமே உடல் நலத்தின் பெயரை, கருத்தைத் தாங்கிய சொர்களல்ல. வாதம் என்பதும் நோய். பித்தம் என்பதும் நோய். கபம் என்பதும் நோய். நம்முடைய மரபில் ஒரு மருத்தவக் கொள்கைக்கு பெயர் வைக்கிறார்கள். எப்படி பெயர் வைக்கிறார்கள்? மூன்றுநோய் நிலைகளைத்தான் பெயராகவே வைத்திருக்கிறார்கள். வாதம் என்றால் காற்று திரிந்து விட்டது. பித்தம் என்றால் வெப்பம் திரிந்து விட்டது. கபம் என்றால் நீர் திரிந்து விட்டது. ஆகவே இயல்பிலிருந்து இந்த மூன்று பொருட்களும் திரிந்து விட்டால் அதுவே நோய் என்று திரிந்த நிலையைத்தான் பெயராகவே வைத்திருக்கிறார்கள்.
கபம் எல்லோருடைய உடல்களிலும் இருக்கும். இந்த வாதம், பித்தம், கபம் பிறந்த குழந்தைக்கும் இருக்கும். அதாவது குழந்தை பிறந்து வரும் போது அது நோயுடன்தான் வருகிறது. பழைய அல்லது முதிய மருத்துவர்கள் எல்லாம் நம்முடைய மரபு மருத்துவர்கள் எல்லாம் என்ன உடம்பு ? என்றுதான் கேட்டார்கள். உடம்புக்கு என்ன என்று கேட்க மாட்டார்கள். என்ன உடம்பு என்று கேட்டால், பித்த உடம்பு என்று நோயாளியாக செல்பவர் சொல்ல வேண்டும். இன்றைக்கு மருத்துவ அறிக்கைகளை எடுத்துக் கொண்டு செல்கிறீர்கள் அல்லவா? அது போல நமது மரபில் ஒரு மருத்துவரை புதிதாக சென்று சந்திக்கும் போது உனக்கு என்ன உடம்பு ? என்று அவர் கேட்பார். எனக்கு பித்த உடம்பு என்று சொல்ல வேண்டும், பித்த உடம்பாக இருந்தால் . அதன் பிறகு அவர் அறிகுறிகளை கேட்பார். நாடி பார்ப்பார். இது பித்த உடம்பு. இந்த பித்த உடலுக்கு இந்த நாடி எப்படி இருக்கிறது? இந்த அறிகுறிகள் என்ன சொல்லுகின்றன? என்று பார்த்து மருந்து கொடுப்பார். வாத உடம்புக்காரர்கள் வாத உடம்பு என்று சொல்லுவார்கள். இதன் பொருள் என்ன? அந்த காலத்தில் ஒவ்வொரு மனிதரும் தன்னுடைய உடல் எந்த உடல் என்று தெரிந்து வைத்திருந்தார்கள்.
39. 06.
ஒரு குடும்பத்தில் மூன்று பேர் இருக்கிறார்கள் என்றால் மூன்று பேருக்கும் மூன்று வகையான உடல்கள் இருக்கும். இது ஒரு அடிப்படை ஒருவருக்கு மிகுதியாக இருமல் இருக்கிறது. இந்த மிகுதியான இருமல் பித்த உடம்புக்காரருக்கு என்ன செய்யும்? வாத உடம்புக்காரருக்கு என்ன செய்யும்? கப உடம்புக்காரருக்கு என்ன செய்யும்? வேறுபடுமல்லவா?
பித்த உடம்புக்காரருக்கு இருமல் இருந்தால் அவருக்கு ஒற்றைத் தலைவலி உடனே வந்து விடும். இது ஒரு அறிகுறி. இது போல பல அறிகுறிகள் உண்டு. நான் உங்களுக்கு புரியவைப்பதற்காக ஒரு சான்று கூறுகிறேன்.
பித்த உடம்புக்காரர்களுக்கு சளி பிடித்தாலே அது தலைவலியாக வரும். அதில் பித்தம் கூடுதலாக இருந்தால் வலது பக்கம் வலிக்கும். பித்தம் சற்று தணிவாக இருந்தால் இடது பக்கம் வலிக்கும். இடது பொட்டில் வலிக்கும். கப உடல்காரர்களுக்கு சளி பிடிக்கிறதென்றால் உடனே தலைவலியே வராது.சில நாட்களுக்குப் பிறகு முன் நெற்றியில் வலிக்கும். அதன் பிறகு முகம் முழுவதும் வலிக்கும். பொருட்படுத்தாமல் விட்டால் பின் மண்டை வலிக்கும், இது கப உடல்காரர் . சளி ஒன்று தான். இரண்டு பேருக்கு சளி வந்தது. ஆனால் அது பித்த உடலில் எவ்வாறு செயல்படும்? இந்த கப உடலில் எவ்வாறு செயல்படும் என்பது வேறுபாடு. இந்த வேறுபாடுகள் எல்லாம் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு காலத்தில் தெரிந்திருந்தது. அதுதான் சிறப்பு. அதனால் தான் அவர்கள் என்ன உடம்பு என்று கேட்டார்கள்.
காய்ச்சல் கூட இன்றைக்கு பொத்தாம் பொதுவாக காய்ச்சல் என்று கூறும் வழக்கம் இருக்கிறது அல்லது கிருமிகளின் பெயரால் காய்ச்சலை அழைக்கிறீர்கள். ஆனால் மரபில் காய்ச் எப்படி அழைக்கப்பட்டது தெரியுமா? வாதசுரம், பித்த சுரம், வாத பித்த சுரம், கப சுரம் என்று இந்த முப்பொருள் கொள்கையின் அடிப்படையில் தான் காய்ச்சலை அழைக்கப்பட்டது.
ஒருவருக்கு வந்திருப்பது வாத சுரம், அவர் வீட்டிலேயே இன்னொருவர் இருக்கிறார்கள். அவருக்கு பித்த சுரமாக இருக்கலாம். ஊர் முழுவதும் காய்ச்சல் இருக்கும். இன்றைக்கு ஒரு கிருமியின் பெயரால் .அதை அழைத்து .வருவீர்கள். எல்லோருக்கும் ஒரே மருந்து கொடுப்பீர்கள். அன்று அப்ற இல்லை. அதாவது நம் முன் ய மரபில் அப்படி இல்லை. ஊர் முழுவதும் காய்ச்சல் இருந்தாலும் ஒவ்வொரு மனிதருக்கும் அது என்ன ஒரு புதிய நுண்ணியிரி மனிதர்கள் மீது ெதாற்றுகிறது என்பதில் எந்த தவறும் இல்லை. அதெல்லாம் தவறு, பொய் என்று நாம் கூறவில்லை. தொற்றுகிறது. அவ்வாறு தொற்றும் பொழுது யாருடைய உடலில் என்ன விளைவை அது ஏற்படுத்துகிறது ?
41. 37 பித்த உடல்காரருக்கு பித்த உடல் கொண்டவருக்கு அதே றுண்ணிய ரி காய்ச்சலை கொண்டு வந்தால் அது பித்த காய்ச்சல், பித்த சுரம். வேறு ஒருவருக்கு என்றால் அதுவாதசுரம் அல்லது கப சுரமாக இருக்கலாம். வாத, பித்த சுரமாக இருக்கலாம். எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அதில் பல பிரிவுகள் இருந்திருக்கின்றன. இவ்வாறு பல கூறுகளாக மனித உடலைப் பற்றி புரிந்து கொண்டு அவற்றுக்கான வீட்டு மருந்துகள் அல்லது மூலிகை மருந்துகள் எல்லாம் கற்றுக் கொடுத்த மரபு நம்மிடம் இருந்திருக்கிறது. இந்த மரபை மீட்டெடுப்பதற்கு நாம் விரும்புகிறோம். அதைச் செய்து கொண்டே இருக்கிறோம்.
என்னைப் பொறுத்தவரை எனக்கு தேவை என்றால் இந்த மரபின் இயல்புகளை நான் உங்களில் உணர்கிறேன். நீங்கள் யாராக இருந்தாலும் உங்களுக்குள் இந்த மரபு பொதிந்திருக்கிறது. ஏனென்றால் நீங்கள் இந்த நிலத்தில் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். இந்த மரபு மறைவாக உள்ளது. உங்கள் அனைவர்களுக்குள்ளும் இந்த மரபை உங்கள் உடலிலிருந்து உங்களுடைய சிந்தனை வழியாக மீட்டெடுக்க வேண்டுமென்று உங்களிடம் நான் பேசிக் கொண்டிருக்கிறேன். நான் 2ங்கள் தனிப்பட்ட எந்த அடையாளத்துடனும் உரையாடவில்லை. அதாவது நீங்கள் என்னை பார்க்கிறீர்கள் தலையசைக்கிறீர்கள். ஆனால் நான் உங்களோடு பேசவில்லை. நான் உங்களுக்குள் பொதிந்திருக்கும் மறைவான இயல்பை வெளிப்படுத்தி எடுத்துக் கொண்டிருக்கிறேன். Aங்கள் உங்களை அறியாமலே உடலைக் கொடுத்துக் கொண்டு இருக்கிறீர்கள். அதற்கு தடையாக இருப்பது உங்களுடைய அறிவு. நீங்கள் ஏற்கனவே படித்தது ஏற்கனவே கேள்விப்பட்டவை ஆகியவை எல்லாம் எனக்கும், உங்கள் இயல்புக்கும் இடையே ஒரு குறுக்கீடாக இருக்கின்றன. அவை எல்லாம் தடுக்கின்றன. அர்த இயல்புகளை 2ங்களிடமிருந்து மீண்டெழும் போது நீங்கள் உங்கள் உடலை நன்கு புரிந்து கொள்வீர்கள். உங்கள் உடலில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் பதட்டம் அடைய மாட்டீர்கள். அல்லது அக்கறையில்லாமல் திரிய மாட்டீர்கள். இந்த இரண்டுமே தவறு.
அடுத்ததாக உங்களுடைய உடலை நீங்களே வாழ்க்கை நெறிமுறைகள் வழியாகவும், வீட்டு மருந்துகள் வழியாகவும் சீராக்கி விடுவீர்கள். இந்த இரண்டுமே நிகழ்ந்து விட்டால் உங்களுடைய அடுத்த தலைமுறை இருக்கிறதல்லவா? அது நோய் பற்றிய அச்சம் ம இல்லாத தலைமுறையாக & ண்ட காலம் நெடிய ஆயுளுடன் இங்கு வாழும்.
44.33
இது தான் நம்முடைய விருப்பம். மீண்டும் ஒரு பின்னடைவை. மருத்துவப் பின்னடைவை, நோய்கள் மீதான அச்சத்தை ஒரு பெரிய மருத்துவ வணிகத்தை நம்முடைய இனம் , நம்முடைய தலைமுறை சாதிக்கக் கூடாது. இப்பொழுது உள்ள இந்த நிலைமை இப்படியே கொடருமானால் இன்னும் சில ஆண்டுகளில் மீண்டும் மக்கள் நவீன மருத்துவத்துறையை நோக்கி ஓட ஆரம்பித்து விடுவார்கள். அது இயற்கை மருத்துவம், நாட்டு மருத்துவம் என்ற எயரில் நடக்கும் கூத்துகள் இப்படியே தொடர்ந்தால் மக்களுக்கு வெறுப்பு வந்து விடும். இவர்களே பானையைத் தூக்கிக் கொண்டு ஆடுவார்கள். இவர்களே அந்தப் பானையை தூக்கிப் போட்டு உடைப்பார்கள். இது நிகழக் கூடாது. இது நிகழாமல் இருக்க வேண்டுமென்றால் இந்த மரபில் உள்ள வாழ்வியல் மற்றும் உடல் ஒழுங்குகள் மீது புரிதல் வேண்டும் என்பதுதான் கருத்து .உடல் ஒழுங்கு என்றால் என்ன? அதற்கும் வாழ்வியலுக்கும் என்ன உறவு இருக்கிறது? என்று பார்ப்போம். உடல் ஒழுங்கு என்பது வளர்ச்சி, சிதைவு ஆகிய இரண்டுக்கும் இடையில் உள்ள ஒரு விகிதம் . உடல் வளர்ச்சி அடைகிறது அதே வேளை சிதைந்து கொண்டு இருக்கிறது. இல்லையா ? வளர்ச்சி, சிதைவு இரண்டும் உண்டு. இந்த இரண்டுக்கு மான ஒரு விகிதம் எவ்வாறு இருக்கிறது என்பது தான் உடல் ஒழுங்கு .
ஒருவர் திடீரென உடல் பருமனாகிறார். இன்னொருவரோ மெலிந்து போகிறார். ஒருவர் திறன் மிகுந்த செயல்பாடுகளில் ஈடுபடுகிறார். இன்னொருவரோ சோர்வடைந்து கொண்டே இருக்கிறார். அவருக்கு பதட்டம் ஏற்படுகிறது. கை கால்களில் நடுக்கம் ஏற்படுகிறது. ஒருவருக்கு கவு ஆனாலே அல்லது அந்தப் பொழுது ஆனாலே உறக்கம் வருகிறது. இன்னொருவருக்கு ஏன் இரவு வருகிறது என்ற கவலை வருகிறது. பலர் பகலில் நன்கு தூங்குகிறார்கள். இரவில் விழித்திருக்கிறார்கள். இவையெல்லாம் என்ன ? இவையெல்லாம் வளர்ச்சி மற்றும் சிதைவில் உள்ள விதித கேடுகள். இந்த விதிதத்தில் ஏதோ ஒரு கேடு இருக்கிறது.
இரவு இளைப்பாறுதல் என்பது உடல் தன்னை முற்றும் முழுவதாக சீரமைத்துக் கொண்டு தன்னை இந்த விகிதத்தில் .நிலை நாட்டுவதற்கான வாய்ப்பு அல்லது அது தான் அடிப்படையான பொழுது என்று புரிந்து கொள்ளுங்கள்.
இரவுப் பொழுதுதான் உடலின் எல்லா
ஒழுங்குகளும் நிகழும் பொழுது, பகலல்ல. ஒழுங்கு நிலைநாட்டப்படுகிறது என்று கூட எடுத்துக் கொள்ளுங்கள். அப்படி நேரடியாகவே சொல்லலாம். இரவு நிலைநாட்டப்படும் இந்த ஒழுங்கு பகலில் செயலாற்றப்படுகிறது. இரவுதான் உறுதி செய்யும். இந்த உடல் ஒழுங்குடன் இருக்கிறது என்பதை உறுதி செய்யும் பொழுதுதான் இரவு. இந்த இரவு ............ ஓய்வு பெறும் வகையிலும் இருக்க வேண்டும். ஒய்வு இல்லையென்றாலோ வெளிச்சம் இருக்கிறது, மிகுதியான வெளிச்சம் இருக்கிறது என்றாலோ உடலின் ஒழுங்கு நிலைநாட்டப்படாது. இதன் பொருள் என்ன? வளர்ச்சி மற்றும் தேய்வு சிதைவு ஆகியவற்றுக்கான விகிதத்தில் குறைவுதற்படும். இரவு ஒழுங்கு நிலைநாட்டப்படவில்லை என்றால் பசியின்மை, செரிமானமின்மை, உடல் பருமன் அல்லது மெலிவு ஏதோ ஒன்று இந்த நடுங்குகுலைந்து கொண்டே இருக்கும்.
இது ஒரு ஒழுங்கு, அடிப்படையான ஒழுங்கு . இரவு என்ன செய்ய வேண்டும்? இவு எதுவும் செய்யக் கூடாது இரவு என்பது இளைப்பாறுதலுக்கானது. இளைப்பாற வேண்டும், அது உறக்கம், புணர்ச்சி ஆகிய இrண்டும் இளைப்பாறுதல். இந்த இரண்டுக்குத்தான் இரவு வேறு எதற்குமே இல்லை.இது ஒரு அடிப்படையான ஒழுங்கு . இவ்வாறு இரவு இளைப்பாறுதலுக்கு உரியதாக இருக்க வேண்டும் என்றால் இந்த இளைப்பாறுதலுக்கு முந்திய அந்திப் பொழுது எப்படி இருக்க வேண்டும்? எப்படி இருந்தால் இரவு இளைப்பாறுதலுக்கு உரியதாக இருக்கும். அந்திப் பொழுது மகிழ்ச்சிக்குரியது. மனமகிழ்ச்சிக்கு உரியது. இரவு அமைதி, அதற்கு முன்பு மகிழ்ச்சி.
மாலை என்றழைக்கப்படும் அந்திப் பொழுது, உங்களுக்கு எது மகிழ்ச்சியைத் தருகிறதோ அதைச் செய்வதாக இருக்க வேண்டும்.
50.00
உறுதியாக வேலை செய்யக் கூடாது. அதாவது பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. மகிழ்ச்சியாக இருந்த என்னவெல்லாம் செய்தால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்று கேட்டால் எனக்கும் தெரியாது. உங்களுக்கும் தெரியாது. உங்களைப் பார்த்து எனக்கும் எதுவும் தெரியாது. ஆனால் இது நடக்குமா ? நடக்காதா? என்று தெரியாமல் வழக்கமாகவே நான் சொல்வேன். எது மன மகிழ்ச்சி? அந்திப் பொழுதில் மனமகிழ்ச்சிக்குரியவை எவை
என்றால் விளையாடுதல், ஏதேனும் ஒரு விளையாட்டு. அது வெளியில் விளையாடுவதாக இருக்கலாம் அல்லது அமர்ந்து விளையாடுவதாக இருக்கலாம். மன மகிழ்ச்சி.போட்டியில்லாமல் இருக்க வேண்டும். விளையாட்டு என்றாலே போட்டியற்றது. யார் வெற்றி பெறுகிறார்கள் என்ற கருத்தெல்லாம் இருக்கக் கூடாது.
விளையாட்டு, இசை, கதையடித்துக் கொண்டிருத்தல், உரையாடிக் கொண்டிருத்தல் அல்லது வேறு ஏதேனும் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறதோ அதைச் செய்தல்.
51 .02 மிதிவண்டியை எடுத்துக் கொண்டு எங்காவது செல்வது, கோவில்களுக்குச் சென்று வருவது, ஏதேனும் படிப்பது. எது உங்களுக்கு மன மகிழ்ச்சி, பொருளற்றதாக இருக்க வேண்டும். அதாவது இதைச் செய்வதால் என்ன நடக்கும் என்று கேட்டால் எதுவும் நடக்காது என்று சில செயல்கள் இருக்கின்றன அல்லவா? விளைவில்லாமல், விளைவு நோக்கமல் எதையாவது செய்வது என்றால் என்னவெல்லாம் செய்வோம், விளையாடுவோம், இசையைக் கேட்போம் அல்லது இசைப்போம்' ஊர் சுற்றுவோம், அரட்டை அடிப்போம், ஏதோ ஒன்று செய்வோம். இதிலெல்லாம் எந்த விளைவும் இல்லை அல்லவா? இவ்வாறு விளைவு நோக்காமல் எதையாவது செய்தால் உங்களுக்கு மகிழ்ச்சி வந்துவிடும். அதுதான் மகிழ்ச்சி. அைளவுக்காக எதைச் செய்தாலும் உங்களுக்கு மகிழ்ச்சி இருக்காது. அதாவது அச்சம் இருந்து கொண்டே இருக்கும். மகிழ்ச்சி வரும், தோற்றுவிட்டால் என்ன செய்வது என்று அச்சம் இருக்கும் இது எந்த அச்சமுமில்லாமல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
அதெப்படி மாலைப் பொழுதில் அன்றாடம் மாலைப் பொழுதில் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா? என்று நீங்கள் நினக்கிறீர்கள்.அப்படி நினைக்காதீர்கள். முதலில் அந்த எண்ணத்தை முதலில் அழியுங்கள். இது வாய்ப்பற்றதல்ல. உங்களால் வாய்ப்பு மறுக்கப்படும் ஒரு அறிவுரை இது. நீங்கள் மின் இந்த வாய்ப்பை மறுக்கிறீர்கள். இது ஏன் இயலாது? உங்களுடைய தலைக்கு மேலே பெரிய கடன் சுமை இருக்கிறதா? இருக்கட்டும்
அது பகலில் இருக்கிறது. அந்தியில் இருக்கிறது. இரவும் இருக்கிறது. தூங்கி எழுந்த பிறகும் இருக்கப் போகிறது அல்லவா?. அது இருக்கட்டும். அந்திப் பொழுது ஒரு மூன்று மணி நேரத்திற்கு அதைப் பற்றி நினக்காதீர்கள்.அதைப் பற்றி நினக்காதீர்கள். அது இருக்கிறது தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது. ஒன்று அந்தக் கத்தியை எடுத்து கழுத்தில் செருகிக் கொண்டு செத்து விட வேண்டும். இல்லையென்றால் கத்தியை அறுத்துத் இச்சி வீசத் தெரிய வேண்டும். இந்த இரண்டுமே தெரியவில்லையென்றால் கத்தி இருப்பதையே மறந்து விட வேண்டும். ஆனால் கத்தி இருக்கிறது என்பது மட்டும்தான் உங்களுக்குத் தெரிகிறது. அதை எடுத்து செருகிக் கொள்வதற்கும் இயலவில்லை. அறுத்துத் தூக்கி எறியவும் இயலவில்லை. இப்பொழுது நான் சொல்லும் இந்த ஒழுங்குகளை கடைப்பிடித்தால் அந்தக் கத்தியை அறுத்து எடுத்து உங்கள் இடுப்பில் செருகிக் கொள்வீர்கள். அது எப்படிப்பட்ட கத்தியாக இருந்தாலும் சரி. பெரிய கடன் சுமை கத்தியா? அைத எடுத்து விடலாம். அதை எடுத்து கையில் வைத்துக் கொள்ளலாம். உறவுகளில் சிக்கலா? அதெல்லாம் ஒரு சிக்கலே இல்லை என்ற நிலைக்கு நீங்கள் வருவீர்கள். வேறு எதுவாக இருந்தாலும் நோய் குறித்த சிக்கலா? இருக்கட்டும். அந்த கத்தி அப்படியே தொங்கிக் கொண்டு இருக்கட்டும். நீங்கள் இப்பொழுது செய்ய வேண்டியது உடலின் ஒழுங்குகளை மட்டுமே பின்பற்றுபவது. உடல் ஒழுங்கு எனப்படுவது அக ஒழுங்கின் விளைவுதான். உடலுக்கென்று தனி , உறுப்புக்கென்று தனி ஒழுங்கு கிடையாது.
54.00
மனிதன் ஒழுங்குதான் உறுப்பின் ஒழுங்காக விளையும். உங்களுடைய மனநிலை எவ்வாறு இருக்கிறதோ அதுவே உறுப்புகளை வடிவமைக்கிறது. ஆகவே நீங்கள் மாலைப் பொழுது மகிழ்ச்சிக்குரியது என்பதை முதலில் நடைமுறைப்படுத்துங்கள். எந்தக் கவலையும் இருக்கட்டும். ஒதுக்கி வைத்து விட்டு எது பிடித்திருக்கிறதோ எது எந்த விளைவையும் குறித்து அச்சத்தை ஊட்டாதிருக்கிறதோ அதைச் செய்யுங்கள். இவ்வாறு ஒரு மூணு மணி நேரம் அமைந்து விட்டால் அதன் பிறகு இரவில் நீங்கள் இளைப்பாறியே தீருவீர்கள். இவ்வாறு மகிழ்ச்சியாக இருக்கும் அந்திப் பொழுதிலேயே இரவு உணவு, இரவுக்கான உணவு அது இgவு என்று அழைக்கக் கூடாது. இரவுக்கான உணவு. அது அந்தப் பொழுதிலேயே முடிந்துவிடும். உங்களுக்கு பசி எடுக்கும். மகிழ்ச்சியாக இருந்து பாருங்கள். அவ்வளவு பசிக்கும். மகிழ்ச்சியான பொழுதுகளில் நன்கு பசிக்கும். உணவு உட்கொண்ட பிறகு உடனே செரிந்து உடனே செரித்து விடும்.
ஏன் செரிமானம் சிக்கலாக இருக்கிறது? மகிழ்ச்சி இல்லையே. எந்த நேரமும் சோர்வு, பதட்டம், கவலை இருந்தால் எப்படி செரிக்கும், பசிக்காது. அதன் பிறகு செரிக்காது. அந்திப் பொழுதிலேயே உணவு உட்கொண்டு அதுவும் செரிமானம் அடைந்த பிறகு இரவு 9 மணியே உங்களுக்கு ஒரு நள்ளிரவு போலாகி விடும். அப்படி தூக்கம் வரும். அமைதி அதுதான். மகிழ்ச்சிக்குப் பிறகு அமைதி. அமைதியாக நீங்கள் உறங்கச் சென்று விடுங்கள். எல்லாச் சிக்கல்களும் விழித்திருக்கட்டும். எது தொடர்ந்து விழித்திருக்கிறதோ அது சிதைந்து போகும். நீங்கள் விழித்திருந்தால் நீங்கள் சிதைந்து போவீர்கள். உங்களுடைய சிக்கல்களெல்லாம் விழித்துக் கொண்டே உங்களை பார்த்துக் கொண்டிருந்தால் சிக்கல்களெல்லாம் சிதைந்து போகும். சிக்கல்களுக்கு எவ்வளவு எரிச்சலாக இருக்கும் நான் இப்படி இருக்குகிறேன். இது இப்படி தூண்டுகிறதே என்று சிக்கல் சளுக்கெல்லாம் கோபம் வருவதை நீங்களும் பார்த்திருப்பீர்கள். குடும்பத்தில் யாராவது ஒருவருக்கு இரவில் நன்கு உறக்கம் வந்து விட்டால் உறக்கம் வராதவருக்கு வரும் கோபம் எப்படிப்பட்டது. இதில் யாருக்கு சிக்கல் விழித்திருப்பவருக்குத்தான். யாராக இருந்தாலும் இரவு விழித்திருப்பது சிக்கலை வளர்த்தெடுப்பது நீங்கள் இவ்வளவு தொல்லைகள் இருக்கும் போது எப்படி தூங்க முடியும்? என்று கேட்கிறீர்கள்
5 6.34
நானென்ன சொல்கிறேன். Rங்கள் னங் கினாலே தொல்லைகளை அழித்து விடலாம். உங்களுக்கு சக்தி கிடைக்கும் மகிழ்ச்சி, அமைதி இந்த இரண்டும் நிறைவடைந்த பிறகு இன்பம். அதுதான் விழிப்பு, காலையில் புத்துணர்ச்சியோடு நீங்கள் விழிக்கிறீர்கள் அல்லவா? எல்லோருமே பலமுறை அப்படி விழித்திருப்பீர்கள். இப்போது இல்லையென்றாலும் உங்களுடைய இளமையில் நீங்கள் சிறாராக இருந்த பொழுது அப்படித்தான் விழித்திருப்பீர்கள். புத்துணர்ச்சியோடு விழித்திருப்பீர்கள். அது மகிழ்ச்சி அல்ல. இன்பம். தூங்கி எழும் பொழுது சிரித்துக் கொண்டு எழுந்தவர் யாருமில்லை. அப்படி எழ மாட்டார்கள்.
... அப்படி எழ மாட்டார்கள். புத்துணர்ச்சி ஒரு பரவசத்தை கொடுக்கும். உண்மையிலேயே அது இன்பம். உயிரோடு இருக்கிறோம் என்பதை அது உறுதிப்படுத்துகிறது. அப்பற பிணம் போல தூங்க வேண்டும். அமைதியாக தூங்கினால் பிணம்தான். அமைதியான இரவுப் பொழுது ஒரு வகை மரணம் . மரணமடைந்து மீண்டும் உயிர்த்தெழுதல். இதற்குள் உங்களுடைய உடல் தன்னுடைய எல்லா இழந்த ஒழுங்குகளையுமே நிலைநாட்டி இருக்கும். எல்லா ஒழுங்குகளுமே நிலைநாட்டப்படும்.
செரிமானச் சிக்கலா? சீராகி இருக்கும். மூட்டுகளில் வலி, தசைகளில் வலி சீராகி இருக்கும். கருப்பை சூடாகி இருக்கிறது, சீராகி இருக்கும். இது ஒரு நாளில் அல்ல. இதுவே உங்களுடைய வாழ்க்கை நடைமுறை ஆகி விட்டால் உடல் ஒழுங்குகளில் எந்த சிக்கல் ஏற்பட்டாலும் அது சீராகி விடும். இன்பமான அந்த விழிப்பு அதிகாலையில் நிகழும் பொழுது உங்களுடைய சிந்தனை இந்த உடல் என்ற எல்லையெல்லாம் கடந்து மனமாகிய அந்தப் பெருவெளியோடு உறவாடும். அதிகாலை நேரம் நாம் எற்கனவே சில உரைகளில் எல்லாம் குறிப்பிட்டு இருக்கிறோம். அதிகாலை காற்று, அதாவது ஒரு நான்கு முதல் ஐந்து மணி வரை வீசும் காற்று எண்ணற்ற கருத்துக்களை வைத்திருக்கிறது என்று கூறியிருக்கிறோம். அந்த காற்றில் அவ்வளவு செய்திகள் உள்ளன. அவ்வளவு கருத்துக்கள் உள்ளன. நீர் ஒன்றே செய்ய வேண்டாம். தூங்கி எழுந்த போதும். புத்துணர்ச்சியோடு எழுந்தால் போதும். அந்தக் காற்றில் அவ்வளவு கருத்துக்கள், மெய்யறிவு உள்ளது. காற்றில்தான் உள்ளது. காற்றில்தான் காலம் இருக்கிறது. காற்றின் வழியாகத்தான் மனிதர்களுக்கு மெய்யறிவு கிடைக்கிறது. நீரின் வழியாகக் கிடைப்பதில்லை.
59. 18
(ஆகஸ்டு 13, 2021 ல் ஒலி வடிவிலிருந்து எழுத்து வடிவிற்கு மாற்றியது)
No comments:
Post a Comment